'கமல்ஜி, ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுல நீங்கதான் நடிக்கணும்!'
'ஓ... தாராளமா... ரொம்ப வருஷமா என்கிட்ட ஒரு (பழைய) கதை இருக்கு..'
'ஆஹா..அப்படியா. நல்லது. பெரிய பட்ஜெட் படம்மா எடுக்கலாம். ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடக்கூடாது. அதே சமயம் அன்பே சிவம், ஹே ராம் மாதிரி உங்களுக்கும் நல்ல பேரும் வந்துடகூடாது. காமெடி படமா எடுத்துடலாமா? '
'ம்ம்ம்...அப்ப நானே திரைக்கதையும் பாத்துகிறேன்.'
'காமெடி படம்கிறதால கிரேஷி மோகனை வசனம் எழுத கேக்கலாமா?'
'படம் பத்து நாளைக்கு மேல ஓட கூடாதுனு வேற சொல்லுறீங்க. அப்புறம் கிரேஷி எதுக்கு... அதையும் நானே பாத்துகிறேன். '
'நடிகர்கள்.....'
'ம்ம்ம்...அதைப்பத்தி கவலைப்படாதீங்க. நீங்க நடிக்கீறீங்களா?'
'ஹி..ஹி..ஹி.... க்ளைமாக்ஸ்....'
'பஞ்சதந்திரம் மாதிரி ட்ரை பண்ணலாமா இல்ல தெனாலி, அவ்வை சண்முகி மாதிரி ட்ரை பண்ணிபாக்கலாமா?'
2010 - வருடக் கடைசியில் பார்த்த படம்.
என்ன ஆச்சி, கமலுக்கு! மத்த படம் மாதிரி 'அதிர' வேண்டாம். 'உலக நாயகன்' பட்டத்தை வைச்சிகிட்டு இப்படி ஏமாத்தகூடாது. கதை என்ன... அது காமெடியா, ஆக்க்ஷனா .... ஒண்ணும் புரியலை!
வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை இல்ல! பொறுமையின் உச்சகட்டம்தான் அகிம்சை. அதுவும் உங்களுக்காக பார்த்த அந்த 'இரண்டரை மணிநேரம்..'!
@
Tuesday, January 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment