குறிப்பாக 2010 ஜூன் 7 ம் தேதி வந்த தீர்ப்பு. 26 ஆண்டுகளுக்கு முன்னால், போபாலில் ஏற்பட்ட நச்சு வாயு விபத்து தொடர்பான வழக்கில்எட்டு பேரை குற்றவாளிகள் என்று போபால் நீதிமன்றம் முடிவு செய்தள்ளது!
1984 டிசம்பர் 3 அதிகாலையில் நடந்த நச்சு வாயு விபத்தில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். நச்சு வாயால் பாதிக்கப்பட்டு மேலும் 20,000க்கும் அதிகமானோர் இறந்தனர். குறைந்தது ஆறு லட்சம் பேர் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளில் நூற்றுக்கணக்கானோர் இன்றும் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர். இதற்கெல்லாம் யூனியன் கார்பைட் நிறுவனம்
கொடுத்த நஷட் ஈடு $441 மில்லியன்!
இந்தக் கொடூர விபத்தில் நடைபெற்ற மனிதப் பலிகளுக்கு யார் காரணம் என்று 26 ஆண்டுகளாக நமது அரசாங்கமும், நீதி மன்றமும் 8 பேரைக் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துள்ளன. தண்டனை..? இரண்டு ஆண்டுகள் சிறை + சில இலட்சங்கள் அபராதம். இதற்குப் பின் 'குற்றவாளிகள்' மேல் முறையீடு செய்வார்கள். அவர்களும் நிரபராதிகள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் சொல்லலாம். அப்பொழுதும் நமது சட்ட அமைச்சர் கடுமையான அதிருப்பதியை மீடியாக்களுக்கு தெரிவிப்பதுடன் அவருடைய பங்கும் முடிந்தது.
நமது பிரதம மந்திரி சோனிஜிக்கும், ராகுலுக்கும் நேர்மையாய் இருப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
வாழ்க நம் தேசத்தலைவர்கள்!