இந்தியா வந்து 90 நாட்கள் ஆகிவிட்டது. ஊருக்கு வந்த சில தினங்களிலேயே அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது..... விதியின் சதியா என்பது தெரியவில்லை.
இனிமேல் யாரவது '2020வில் இந்தியா வல்லரசு ஆகும் - சீனாவுடன் போட்டிபோட இந்தியாவைவிட யாருக்கு தகுதி இருக்கிறது - உலகிலேயே சீனாவுக்கு அடுத்து நம்ம நாடுதான் பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது' என்று 'தேசப்பற்றுடன் கனவு கண்டு கொண்டிருப்பவர்களை' பார்த்தால் அனுதாபம் படுவதைவிட வேற என்ன செய்ய...?
எத்தனை பெரியாரும், காந்தியும் வந்தாலும் திருத்தவே முடியாத ஒரு சமூகம் ஊழலில் திளைத்தவர்களாகவும் , நேர்மை துளியும் இல்லாதவர்களாகவும், வார்க்கப்பட்டு, வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
@
ஆகஸ்டு, 27,2010
Thursday, December 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment