Thursday, January 20, 2011

சென்னை புத்தக் கண்காட்சி - 3

* தமிழிலில் அகராதி  இருப்பது தெரிந்ததுதான். ஆனால்  'க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி'  ரொம்பவே ஆச்சரியமானது. பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில்!  பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

*  சோர்வு நீங்க, கொஞ்ச நேரம் மணிமேகலை பதிப்பகத்திற்கு சென்றால் போதும். நாம் நினைக்கிற மற்றும் கற்பனையே பண்ணிப் பார்த்திராத தலைப்பில் புத்தகங்கள்! அதே நேரம், லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள்  பல தொகுதிகளாக வந்திருந்தது. ஒரு காலத்தில் கல்கண்டில் ஆர்வமாக வந்த பொழுது படித்த கட்டுரைகள். பின்பு நண்பன் அந்தக் கட்டுரை தொகுப்பை பரிசாக கொடுத்தது. 

* தூர்தர்ஷன்கூட கடை வைத்திருந்தார்கள். தில்லுதான்!!

* அனேகமா எல்லா கடைகளிலும் கிடைக்கும் புத்தகமாக இருப்பது, பொன்னியின் செல்வனாகத்தான் இருக்கும்!

* வாங்க மறந்ததில், பத்ரி எழுதிய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை! இந்த வார இந்தியா டுடேயில்  திமுக கண்மனிகள் இந்த புத்தகத்தை 'வினியோகம்' செய்த செய்தி வந்திருந்தது. அட!!



இந்த வருடம் புத்தக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:
1. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
2. உடையார் (பாகம் 1) - பாலகுமாரன்
3.  இன்றைய காந்தி - ஜெயமோகன்
4. எழுதும் கலை - ஜெயமோகன்
5. இந்திய ஞானம்  - ஜெயமோகன்
6. சூடிய பூ சூடற்க  - நாஞ்சில் நாடான்
7. இதற்கு முன்பும், இதற்கு பிறகும் - மனுஷ்ய புத்திரன்
 8. உறவுகள் - டாக்டர் ருத்ரன்
9. தகவல் பெறும் உரிமை - மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு
10. வாழ்க்கை முத்துக்கள் - சுகி.சிவம்
11. Roadguide to Chennai (TTK Publications)

வாங்க வேண்டிய, (இப்பொழுது விடுபட்ட)  புத்தகங்கள்:
1. ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ்
2. துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்
3. உடையார் (பாகம் 3-6) - பாலகுமாரன்
4. கொற்றவை - ஜெயமோகன்

@

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails