மாதம் ஒன்று கிறுக்க வேண்டும் என்று தோன்றினாலும், நேரமின்மையும், சோம்பேறித்தனமும் இந்தப்பக்கமே வரமுடியாமல் செய்கிறது.
நந்தலாலா, அம்பேத்கார் பார்க்கவேண்டும். ஆனால் அதுக்குள் அம்பேத்கார் காலை 9 மணி காட்சி மட்டும் பேருக்கு போட்டுவிட்டு ''சிக்கு புக்கு'' ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நிலை "நந்தலாலா"வுக்கு ஆகும் முன் பார்த்துவிடலாம் என்று எண்ணத்தில் நேற்று பார்த்தது.
மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் எனக்கு பிடித்திருந்தது.
நந்தலாலா -
இளையராஜா, மிஷ்கின், அந்த குட்டிபையன் தவிர்த்து - பள்ளி மாணவி, லாரி ஓட்டுநர், இளநீர்க்காரக் கிழவர், போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் என்று படம் முழவதும் வரும் அனைத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாழ்க்கைக்கு பல அர்த்தங்கள் சொல்பவை!
இறுதியாக -
“நீங்க என்ன சாதி அண்ணே?”
“மெண்டல்”
“அப்படி ஒரு சாதி இருக்கா அண்ணே?”
Thanks, மிஷ்கின்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment