Thursday, April 1, 2010

போகிற போக்கில் - ஏப்ரல் 1,2010

இப்பொழுதுதான், DVDயில் 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்தேன். ஒரு அருமையான fantasy கதையை சோழர்கள், பாண்டியர்கள்னு குழப்பி, இசை, கார்த்திக்கின் கடுப்படிக்கும் வசனம்/காமெடி, ரீமாசென்னு மேலும் வெறுப்பேத்தி..... 'ஆளை விடுங்கடா சாமி'னு ஒரு வழியா முழுப்படத்தையும் பார்த்தோம்(!).

சில நேரங்களில் படத்தைவிட பதிவுலகில் வரும் விமர்சனங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கும். அந்த வகையில் இந்தப்படத்தை தாளரமாக சேர்க்கலாம். எவ்வளவுதான் உழைப்பு...மண்ணாங்கட்டினு பேசினாலும் 2 1/2 மணிக்கு அப்புறம் என்ன சொல்லவாராங்கனு புரியமா குழப்பும்போது எதையும் பாராட்ட தோன்றவில்லை!
@

எப்பொழுதுமே மலையாள படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அவர்கள் எடுக்கும் கதைகளம், திரைக்கதை அதற்கு உயிர் கொடுக்கும் அருமையான நடிகர்-நடிகைகள்!

சமீபத்தில் பார்த்தது பிளஸ்ஸி(Blessy)யின் 'பிரம்மரம் (மலையாளம்)'. தமிழிலில் 'வண்டு'னு அர்த்தம்! சரியான தலைப்புதான்...

முதல் பகுதியில், விறு விறுப்புக்காக திரைக்கதை தடுமாறினாலும் இரண்டாம் பகுதி மனதை அள்ளுகிறது. வித்தியாசமான கதைகளம். சிவன்குட்டியாக மோகன்லால்! அவர் நடிப்புக்கு சரியான தீனி. அவருடைய மனைவியாக பூமிகா. அழுகுதான்..மலையாள கதாபாத்திரத்துக்கு  ஒத்துவரவில்லை!

பிளஸ்ஸியின் 'காழ்ச்சா' இன்னும் பார்க்கவில்லை. 'தன்மந்ரா' அருமையான திரைப்படம்! 'பலுங்கு' ஓகே!

'தன்மந்ரா' அளவுக்கு 'பிரம்மரம்' மனதில் பதியவில்லை. ஆனால் மோகன்லாலுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்!

@

இந்தவாரம் புனித வாரம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்).

தவக்கால ஆரம்பத்தில் - ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடமாவது பைபிள் படிக்கணும் நினைப்பு, நினைவாகவே இருக்கிறது. அதற்குள் ஈஸ்டரும் வந்து விட்டது. இனி அடுத்த ஆண்டுதான் நினைவுக்கு வரும்.

கல்லூரி நாட்களில் தவக்காலத்தில் நான்-வெஜிடேரியன் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயமாக இருந்ததில்லை. இப்பொழுது...அதுவும் வெளிநாட்டில் இருக்கும் பொழுது அதுவே பெரிய சாதனையாக இருக்கிறது.

ஈஸ்டருக்கு அப்புறம்(!) ஒரு வருடத்திற்கு வெஜிடேரியனாக மாறலாம் என்பது எண்ணம். நண்பன் FBல் சொன்ன ஜப்பானிய தத்துவம் நினைவுக்கு வருகிறது..'ஆரம்பிப்பது எளிது. தொடருவது கடினம்!'

பார்க்கலாம்!

@@

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails